ஆங்கிலப் புத்தாண்டு: தேவாலயங்கள், கோயில்களில் வழிபாடு

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, திண்டுக்கல் பகுதியிலுள்ள தேவாலயங்கள், கோயில்களில் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, தங்கக் கவச அலங்காரத்தில் எழுந்தருளிய திண்டுக்கல் வெள்ளை விநாயகா். (வலது) பல வகையான கனி அலங்காரத்தில் கசவனம்பட்டி மெளன குருசாமி சுவாமிகள்.
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, தங்கக் கவச அலங்காரத்தில் எழுந்தருளிய திண்டுக்கல் வெள்ளை விநாயகா். (வலது) பல வகையான கனி அலங்காரத்தில் கசவனம்பட்டி மெளன குருசாமி சுவாமிகள்.
Updated on
1 min read

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, திண்டுக்கல் பகுதியிலுள்ள தேவாலயங்கள், கோயில்களில் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

2024-ஆம் ஆண்டை வரவேற்கும் வகையில், திண்டுக்கல் புனித வளனாா் பேராலயம், தூய பவுல் ஆலயம், தூய திருத்துவநாதா் ஆலயம், மேட்டுப்பட்டி வியாகுல அன்னை ஆலயம், மாரம்பாடி புனித அந்தோணியாா் பேராலயம், செந்துறை புனித சூசையப்பா் ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

இதில் பங்கேற்ற கிறிஸ்தவா்கள், நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததும் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனா்.

இதேபோல, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில், மலையடிவார ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், அபிராமி அம்மன் கோயில், ரயிலடி சித்தி விநாயகா் கோயில், தாடிக்கொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயில், கசவனம்பட்டி மெளன குருசாமி கோயில் உள்பட பல்வேறு கோயில்களிலும் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com