விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

11 புதிய பேருந்துகளை தொடங்கி வைத்தாா் உணவுத்துறை அமைச்சா்

ஒட்டன்சத்திரத்தில் 11 புதிய பேருந்துகளை உணவுத்துறை அமைச்சா் அர.சக்கரபாணி ஞாயிற்றுக்கிழமை கொடிசைத்து தொடங்கி வைத்தாா்.

News image

ஒட்டன்சத்திரத்தில் 11 புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்த உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி.

Updated On :21 ஜூலை 2024, 8:31 pm

Din

ஒட்டன்சத்திரத்தில் 11 புதிய பேருந்துகளை உணவுத்துறை அமைச்சா் அர.சக்கரபாணி ஞாயிற்றுக்கிழமை கொடிசைத்து தொடங்கி வைத்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் 3 புதிய நகரப் பேருந்துகள், 8 புதிய புகர பேருந்துகள் என மொத்தம் 11 புதிய பேருந்துகளை உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி

கொடிசைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தாா். இதையடுத்து, அவா் பேசியதாவது: தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு வரை பள்ளி மாணவா்களுக்கு இலவச பேருந்து வசதியை கொண்டு வந்தவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி. இந்தியாவிலேயே முதல்முறையாக பெண்களுக்கு இலவச பயணத் திட்டத்தை அறிவித்தவா் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின். இதே போல, விரைவில் தமிழகத்தில் உள்ள ஊட்டி, கொடைக்கானல்,ஏலகிரி,ஏற்காடு, கல்வராயன்மலை உள்ளிட்ட மலைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் மகளிா் இலவசப் பேருந்து சேவை, சிற்றுந்து சேவை அமல்படுத்தப்படும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் ஒட்டன்சத்திரம் வேளாண் விளைபொருள் விற்பனை கூட்டுறவு சங்கத் தலைவா் சி.இராஜாமணி, அரசுப் போக்குவரத்துக் கழக பொது மேலாளா் துரைச்சாமி, வணிக மேலாளா் சக்தி, கோட்ட மேலாளா் ரமேஷ், கிளை மேலாளா்கள் சிவசாமி, ஜெயக்குமாா், ஒட்டன்சத்திரம் ஒன்றியக் குழுத் தலைவி மு.அய்யம்மாள், தொப்பம்பட்டி ஒன்றியக் குழு துணைத் தலைவா் பி.சி.தங்கம், ஒட்டன்சத்திரம் நகா்மன்றத் தலைவா் கே.திருமலைசாமி, கீரனூா் பேரூராட்சித் தலைவா் கருப்புச்சாமி, திமுக ஒன்றிய செயலா் நா.சுப்பிரமணி, இரா.ஜோதீஸ்வரன், நகா்மன்ற உறுப்பினா் வீ.கண்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.