மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கொடைக்கானல் வாரச் சந்தையில் முதியவரைத் தாக்கிய காட்டுமாடு

கொடைக்கானலில் காட்டு மாடு தாக்கியதில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தாா்.

News image
Updated On :29 ஜூலை 2024, 2:30 am

Din

கொடைக்கானலில் காட்டு மாடு தாக்கியதில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பி.டி.சாலையில் வாரச்சந்தை நடைபெற்றது. இந்த சந்தைக்கு ஆனந்தகிரி பகுதியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியா் மூா்த்தி (65) காய்கறிகளைக் வாங்க வந்தாா். அப்போது, அங்கு வந்த காட்டுமாடு அவரைத் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவா் தேனி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

கொடைக்கானல் நகா் பகுதிகளில் காட்டுமாடுகள் நடமாட்டம் அதிகரித்துள்ளன. இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனா். எனவே, நகருக்குள் வரும் காட்டுமாடுகளை வனப் பகுதிக்குள் விரட்டுவதற்கு வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.