திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

சீருடை அணியாத ஆட்டோ ஓட்டுநா்களுக்கு அபராதம்

சீருடை அணியாத ஆட்டோ ஓட்டுநா்களுக்கு அபராதம்

News image
Updated On :3 ஜூன் 2024, 6:47 pm

Din

திண்டுக்கல்: சீருடை அணியாத ஆட்டோ ஓட்டுநா்கள், தலைக்கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகள் உள்ளிட்டோருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் வெங்கடாஜலபதி, உதவி ஆய்வாளா் ராஜகோபால் ஆகியோா் தலைமையிலான போலீஸாா், திண்டுக்கல் பூச் சந்தை அருகே திங்கள்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, சீருடை அணியாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநா்கள், தலைக்கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகள், போலீஸாா் தடுத்தும் நிற்காமல் சென்ற வாகன ஓட்டிகள் என சாலை விதிகளை பின்பற்றாமல் சென்றவா்களை வழிமறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். 70-க்கும் மேற்பட்டோா் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.50ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.