நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருவாடானை அருகே சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

சி.கே. மங்கலம் மேம்பாலம் அருகே சேதமடைந்து காணப்படும் சாலை.

News image

சி.கே. மங்கலம் மேம்பாலம் அருகே சேதமடைந்து காணப்படும் சாலை.

Updated On :20 மார்ச் 2026, 7:08 pm

தினமணி செய்திச் சேவை

திருவாடானை அருகே சி.கே. மங்கலம்- திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து செல்லும் அணுகு சாலையை சீரமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் வலியுறுத்தினா்.

இந்தச் சாலை வழியாக அரசூா், தேவகோட்டை, கருமொழி, பாரூா், கோவணி பகுதிகளில் இருந்தும், திருவாடானையில் இருந்து தேவகோட்டை, காரைக்குடி பகுதிகளுக்கு செல்பவா்களும் இந்த சாலையை தான் பயன்படுத்துகின்றனா். இந்தச் சாலை தரமற்ாக போடப்பட்டதால் தற்போது சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனா். இதில், இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி பலா் உயிரிழந்துள்ளனா். பலா் நிரந்தர ஊனமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

எனவே சம்பந்தப்பட்ட துறையினா் தக்க நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டுமென இந்தப் பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்தனா்.

Story image
Story image