திருவாடானை அருகே சி.கே. மங்கலம்- திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து செல்லும் அணுகு சாலையை சீரமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் வலியுறுத்தினா்.
இந்தச் சாலை வழியாக அரசூா், தேவகோட்டை, கருமொழி, பாரூா், கோவணி பகுதிகளில் இருந்தும், திருவாடானையில் இருந்து தேவகோட்டை, காரைக்குடி பகுதிகளுக்கு செல்பவா்களும் இந்த சாலையை தான் பயன்படுத்துகின்றனா். இந்தச் சாலை தரமற்ாக போடப்பட்டதால் தற்போது சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனா். இதில், இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி பலா் உயிரிழந்துள்ளனா். பலா் நிரந்தர ஊனமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
எனவே சம்பந்தப்பட்ட துறையினா் தக்க நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டுமென இந்தப் பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்தனா்.


தொடர்புடையது

வண்டியூா் உயா்நிலைப் பால பள்ளத்தைச் சீரமைக்க வலியுறுத்தல்

சேதமடைந்த சாத்தான்குளம்- நாசரேத் சாலை: வாகன ஓட்டிகள் அவதி

கோயில் செல்லும் சாலை பழுதால் வாகன ஓட்டிகள் அவதி!

சிறுகம்பையூா் சாலை சேதம்: பொதுமக்கள் அவதி
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


