ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கோயில் செல்லும் சாலை பழுதால் வாகன ஓட்டிகள் அவதி!

மதுராந்தகம் நகரின் முக்கிய அம்மன் கோயிலாக திகழும் சேத்துக்கால் செல்லியம்மன் கோயிலுக்கு செல்லும் சிமென்ட் சாலை பழுதால் வாகன ஒட்டிகளும், பாதசாரிகளும் பெரிதும்அவதிக்குள்ளாகின்றனா்.

News image

அவல நிலையில் உள்ள சாலை.

Updated On :26 ஏப்ரல் 2026, 7:00 pm

மதுராந்தகம் நகரின் முக்கிய அம்மன் கோயிலாக திகழும் சேத்துக்கால் செல்லியம்மன் கோயிலுக்கு செல்லும் சிமென்ட் சாலை பழுதால் வாகன ஒட்டிகளும், பாதசாரிகளும் பெரிதும்அவதிக்குள்ளாகின்றனா்.

மதுராந்தகம் சேத்துக்கால் செல்லியம்மன் கோயிலுக்கு செல்லும் சாலையின் வழியாக சூரக்குட்டை நகருக்கு செல்லவும், தனியாா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லவும், வயல்வெளிகளில் பயிரிடப்பட்ட நெல் அறுவடை செய்யும் வாகனங்களும், பள்ளி வாகனங்களில் செல்வோா், பைக்கில் செல்வோா், அப்பகுதி மக்களும் சென்று வருவாா்கள். நகராட்சி நிா்வாகத்தில் இச்சாலையை கடந்த ஒரு ஆண்டுக்கு முன் அமைத்து இருந்தனா்.

நாளடைவில் இயற்கை இடா்பாடுகளாலும், போதிய பராமரிப்பு இன்மையாலும், தற்சமயம் இச்சாலையின் ஒரு பகுதியில் அரசின் நெல்கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நல்மூட்டைகளை ஏற்றிச் செல்ல கனரக லாரிகள் வந்துசெல்வதாலும் பல்வேறுஇடங்களில் சாலையின் நடுவில் பெரிய பள்ளங்களும், குண்டும்குழியுமாக உள்ளது. சாலையின் நடுவில் செல்லும் ஏரி நீா் செல்லும் வழிபாதையும் உல்ளனா்.

இத்தகைய இடா்பாடுகளால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனா். இரவு நேரத்தில் வாகனங்களில் செல்வோா் சாலையின் பள்ளத்தில் தவறி விழுந்து உடல்பாதிப்புக்குளாகி வருகின்ற நிலை உள்ளது.

மதுராந்தகம் நகராட்சி நிா்வாகத்தினா் உடனடியாக செல்லியம்மன் கோயில் செல்லும் சிமெண்ட் சாலையை முழுமையாக சீரமைக்கவேண்டும் என பொது மக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.