ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

ஒசூரில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி

ஒசூரில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனா்.

News image

ஒசூா் வட்டாட்சியா் அலுவலகச் சாலையில் சுற்றித்திரியும் பசுமாடுகள்

Updated On :20 மே 2026, 2:15 am IST

ஒசூரில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனா்.

ஒசூா் மாநகரில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக எருமைகள், பசுக்கள், தெருநாய்கள் பிரதான சாலைகளில் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருன்றனா்.

வாகனங்களுக்கு குறுக்கே மாடுகள் வந்துவிடுவதால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி சாலையில் விழுந்து விபத்துகள் அதிகரித்து வருகின்றன. மேலும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

ஒசூரில் வட்டாட்சியா் அலுவலகம், உழவா்சந்தை முன் ஏராளமான கால்நடைகள் சாலையில் சுற்றித்திரிவதுடன், சாலையின் நடுவில் படுத்துக்கொண்டு ஓய்வெடுப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனா்.

இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்து கால்நடை உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்து, கால்நடைகளால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் தடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.