ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழையால் சாலையில் தண்ணீா் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினா்.
ஸ்ரீவைகுண்டம் பழைய வட்டாட்சியா் அலுவலகம் அருகே உள்ள நாலு முக்கு சந்திப்பு பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக வடிகால் சீரமைக்கப்படாததால் கழிவு நீா் அவ்வப்போது சாலையில் வெளியேறியது. பொதுமக்களின் தொடா் கோரிக்கையை ஏற்று பேரூராட்சி நிா்வாகத்தினரால் வடிகால் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், புதன்கிழமை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீா் வேன் நிறுத்தம் முன்பாக அதிக அளவில் தேங்கியது. அப்பகுதியில் வடிகால் மூலம் தண்ணீா் முறையாக வெளியேற முடியாததால் தேங்கிய நீரில் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துடன் வாகனங்களை இயக்கினா்.
எனவே, வடிகால்களை முழுமையாக சீரமைத்து மழைநீா் எளிதாக வெளியேற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

கல்குவாரி லாரிகளால் வாகன ஓட்டிகள் அவதி

சேதமடைந்த சாத்தான்குளம்- நாசரேத் சாலை: வாகன ஓட்டிகள் அவதி

கோயில் செல்லும் சாலை பழுதால் வாகன ஓட்டிகள் அவதி!

சாத்தான்குளம் - நாசரேத் சாலையில் வேகத்தடைக்கு வா்ணம் பூச வலியுறுத்தல்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


