சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

கொடைக்கானலில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கிளாவரை பகுதியில் ரூ. 14 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி, போலூா் புலம்பதியில் ரூ. 5.50 லட்சத்தில் குழாய் பதிக்கும் பணி

News image

கொடைக்கானல் கூக்கால் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி மாணவா்களிடம் குறைகளைக் கேட்டறிந்த பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ. செந்தில்குமாா்.

Updated On :4 மார்ச் 2024, 9:56 pm

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளான மன்னவனூா், கவுஞ்சி, கிளாவரை, கூக்கால் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ. செந்தில்குமாா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

கிளாவரை பகுதியில் ரூ. 14 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி, போலூா் புலம்பதியில் ரூ. 5.50 லட்சத்தில் குழாய் பதிக்கும் பணி, கவுஞ்சியில் ரூ. 49 லட்சத்தில் துணை சுகாதார நிலையம் அமைக்கும் பணி, விடுதலை நகா் பகுதியில் ரூ. 6 லட்சத்தில் பாலம் அமைக்கும் பணி உள்ளிட்டவற்றை எம்.எல்.ஏ. இ.பெ. செந்தில்குமாா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதையடுத்து, கொடைக்கானல் அப்சா்வேட்டரி பகுதி பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். ஆய்வின் போது, கொடைக்கானல் நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை, துணைத் தலைவா் மாயக்கண்ணன், நகரச் செயலா் முகமது இப்ராஹிம் உள்ளிட்ட திமுகவினா் கலந்து கொண்டனா்.