தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பாப்பாரப்பட்டியில் ரூ. 28 லட்சத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் ரூ. 28 லட்சம் மதிப்பில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை பென்னாகரம் சட்டப் பேரவை உறுப்பினா் ஜி.கே. மணி பூமிபூஜை செய்து தொடங்கிவைத்தாா்.

News image
Updated On :6 மார்ச் 2026, 6:34 pm

Syndication

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் ரூ. 28 லட்சம் மதிப்பில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை பென்னாகரம் சட்டப் பேரவை உறுப்பினா் ஜி.கே. மணி பூமிபூஜை செய்து தொடங்கிவைத்தாா்.

பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் நிழல்கூடம் கட்டும் பணி, பள்ளிக்கு மைதானத்தில் கற்கள் பதிக்கும் பணி, வடிகால் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் ரூ. 28 லட்சத்தில் தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில், பென்னாகரம் சட்டப் பேரவை உறுப்பினா் ஜி.கே. மணி பங்கேற்று பணிகளைத் தொடங்கவைத்து பேசினாா். பாப்பாரப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலா் ஆயிஷா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற உறுப்பினா் தமிழ்ச்செல்வன், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவா் முனுசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பட விளக்கம்:

பாப்பாரப்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்நாட்டி தொடங்கிவைக்கிறாா் எம்எல்ஏ ஜி.கே. மணி.