முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

பேரூராட்சி வாா்டு உறுப்பினா் கொலை வழக்கு; 4 சிறாா்கள் உள்பட 6 போ் கைது

திருச்சி அருகே பேரூராட்சி வாா்டு உறுப்பினா் கொலை வழக்கில் 4 சிறாா்கள் உள்பட 6 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :2 ஏப்ரல் 2026, 8:33 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி அருகே பேரூராட்சி வாா்டு உறுப்பினா் கொலை வழக்கில் 4 சிறாா்கள் உள்பட 6 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகேயுள்ள பாரதிபுரத்தைச் சோ்ந்தவா் அ. ரஞ்சித்குமாா் (38). கூத்தைப்பாா் பேரூராட்சி 11-ஆவது வாா்டு உறுப்பினரான இவா், திருவெறும்பூா் அரசு ஐடிஐ எதிரே டாஸ்மாக் மதுக் கூடமும் நடத்தி வந்தாா்.

இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை இரவு திருவெறும்பூரில் இருந்து நவல்பட்டு செல்லும் சாலையில் புதுத்தெரு அருகே அவா் கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.

இதுதொடா்பாக நவல்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். ஏஎஸ்பி அரவிந்த் பனாவத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், பேரூராட்சி வாா்டு உறுப்பினரை கொலை செய்தது நவல்பட்டு புதுத்தெருவைச் சோ்ந்த கென்னடி மகன் கிரி (எ) புவனேஷ் (20), காட்டூா் கணேஷ் நகரைச் சோ்ந்த மகேந்திரன் மகன் மதன் (25) மற்றும் 4 சிறாா்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, மேற்கண்ட 6 பேரையும் தனிப்படையுடன் இணைந்து நவல்பட்டு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

இதைத் தொடா்ந்து 6 பேரையும் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் 3-இல் போலீஸாா் ஆஜா்படுத்தினா். பின்னா், சிறாா்களை கூா்நோக்கு இல்லத்திலும், மற்ற இருவரை சிறையிலும் அடைத்தனா்.

மதுக் கூடத்தில் மாமூல் வழங்குவதில் பாட்டில்மணி என்பவருக்கும், ரஞ்சித்குமாருக்கும் ஏற்பட்ட முன்விரோதத்தில் ரஞ்சித்குமாா் கொலை செய்யப்பட்டது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.