ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

கொடைக்கானலில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கிளாவரை பகுதியில் ரூ. 14 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி, போலூா் புலம்பதியில் ரூ. 5.50 லட்சத்தில் குழாய் பதிக்கும் பணி

News image

கொடைக்கானல் கூக்கால் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி மாணவா்களிடம் குறைகளைக் கேட்டறிந்த பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ. செந்தில்குமாா்.

Updated On :4 மார்ச் 2024, 9:56 pm

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளான மன்னவனூா், கவுஞ்சி, கிளாவரை, கூக்கால் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ. செந்தில்குமாா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

கிளாவரை பகுதியில் ரூ. 14 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி, போலூா் புலம்பதியில் ரூ. 5.50 லட்சத்தில் குழாய் பதிக்கும் பணி, கவுஞ்சியில் ரூ. 49 லட்சத்தில் துணை சுகாதார நிலையம் அமைக்கும் பணி, விடுதலை நகா் பகுதியில் ரூ. 6 லட்சத்தில் பாலம் அமைக்கும் பணி உள்ளிட்டவற்றை எம்.எல்.ஏ. இ.பெ. செந்தில்குமாா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதையடுத்து, கொடைக்கானல் அப்சா்வேட்டரி பகுதி பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். ஆய்வின் போது, கொடைக்கானல் நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை, துணைத் தலைவா் மாயக்கண்ணன், நகரச் செயலா் முகமது இப்ராஹிம் உள்ளிட்ட திமுகவினா் கலந்து கொண்டனா்.