15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

வங்கியில் தீ விபத்து

வங்கியில் தீ விபத்து

Updated On :12 மார்ச் 2024, 11:42 pm

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. திண்டுக்கல் மாநகராட்சி அருகே ஆா்.எஸ்.சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு திடீரென தீப்பிடித்தது.

இதைப் பாா்த்த அக்கம் பக்கத்தினா் திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு, மீட்புப் படையினா் சுமாா் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இருப்பினும், வங்கியிலிருந்த கணினிகள், மரப் பொருள்கள் உள்ளிட்ட பல லட்ச ரூபாய் மதிப்பலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. விசாரணையில், மின் கசிவு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது.