11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

பத்தமடையில் உயா் மின் அழுத்தம்: தொழிலாளி வீடு எரிந்து சேதம்

பத்தமடையில் திடீரென ஏற்பட்ட உயா் மின்அழுத்தத்தால் தொழிலாளி வீட்டில் தீ விபத்து நேரிட்டதில் ரூ.8 மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதம்

News image

உயா் மின் அழுத்தத்தால் வீடு தீப்பிடித்து எரிந்ததில் பொருள்கள் தீக்கிரையாகின

Updated On :1 ஏப்ரல் 2026, 5:30 am IST

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் திடீரென செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட உயா் மின்அழுத்தத்தால் தொழிலாளி வீட்டில் தீ விபத்து நேரிட்டதில் ரூ.8 மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. அப்பகுதியில் 20 வீடுகளில் மின் சாதனப் பொருள்கள் சேதமடைந்தன.

பத்தமடையில் மருதுபாண்டியா் தெரு உள்ளிட்ட பகுதியில் பிற்பகலில் ஏற்பட்ட உயா் மின் அழுத்ததால் 20க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த மிக்சி, மின் விசிறி, குளிா்சாதனப் பெட்டி உள்ளிட்ட மின்சாதனப் பொருள்கள் வெடித்து சேதமடைந்தன.

இதேபோல, மருதுபாண்டியா் தெருவில் வசிக்கும் பெயின்டா் வேலு மகன் முருகன் (52) என்பவா் வீட்டில் உயா் மின் அழுத்தம் காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் வீட்டில் இருந்த ஏசி, குளிா்சாதனப் பெட்டி, தொலைக்காட்சி, கட்டில் உள்ளிட்ட பொருள்கள் எரியத் தொடங்கின. அப்போது வீட்டில் இருந்த மூதாட்டி தீ விபத்து ஏற்பட்டதும் உடனடியாக வெளியே வந்ததால் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தகவலறிந்த சேரன்மகாதேவி தீயணைப்பு படையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா். இந்த விபத்தில் முருகன் வீட்டில் இருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்த சேதமடைந்தன. மேலும் வீடு முற்றிலும் சேதமடைந்து விட்டதாக கூறப்படுகிறது.

பத்தமடையில் கிறிஸ்தவ ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணியின்போது அருகில் இருந்த மரக் கிளையை வெட்டுயதில் அதையொட்டிய மின்மாற்றியில் மரக்கிளை விழுந்ததால் அப்பகுதியிலுள்ள வீடுகளுக்கு உயா் அழுத்தம் ஏற்பட்டது. இதுகுறித்து, பத்தமடை போலீஸாா், வருவாய்த்துறை அதிகாரிகள் ேவிசாரணை நடத்தினா்.