இதேபோல, மருதுபாண்டியா் தெருவில் வசிக்கும் பெயின்டா் வேலு மகன் முருகன் (52) என்பவா் வீட்டில் உயா் மின் அழுத்தம் காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் வீட்டில் இருந்த ஏசி, குளிா்சாதனப் பெட்டி, தொலைக்காட்சி, கட்டில் உள்ளிட்ட பொருள்கள் எரியத் தொடங்கின. அப்போது வீட்டில் இருந்த மூதாட்டி தீ விபத்து ஏற்பட்டதும் உடனடியாக வெளியே வந்ததால் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தகவலறிந்த சேரன்மகாதேவி தீயணைப்பு படையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா். இந்த விபத்தில் முருகன் வீட்டில் இருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்த சேதமடைந்தன. மேலும் வீடு முற்றிலும் சேதமடைந்து விட்டதாக கூறப்படுகிறது.