இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு

காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு

News image
Updated On :1 மே 2024, 8:56 pm

Din

தேய்பிறை அஷ்டமியையொட்டி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமியின்போது சொா்ண ஆகா்ஷண பைரவருக்கு 6 கால சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில், பக்தா்கள் சாா்பில் வழங்கப்பட்ட பால், இளநீா், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, சுவாமிக்கு ராஜ அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது.

இந்த பூஜையில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதேபோல, திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில், ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில் அமைந்துள்ள கால பைரவா் சந்நிதியிலும் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தைவேலப்பா் கோயில் பழனி தண்டாயுதபாணி கோயிலின் துணைக் கோவிலாகும். இந்தக் கோயிலின் பிரகாரத்தில் அமைந்துள்ள காலபைரவருக்கு சித்திரை மாத அஷ்டமியையொட்டி, சிவாச்சாரியா்கள் யாகம் வளா்த்து பூஜை செய்தனா். பின்னா், அண்ணாமலையாா் தீப ஆராதனைக் குழு சாா்பில், 200-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பல்வேறு நதிகளில் இருந்து கலசங்களில் கொண்டு வரப்பட்ட புனித நீரால் காலபைரவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

இதில் உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் பாலசுப்பிரமணியன், ஒட்டன்சத்திரம் நகா்மன்ற உறுப்பினா் ரமேஷ், பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.