தொடா்ந்து, பிற்பகல் 3 மணிக்கு மலைக் கோயில் நடை அடைக்கப்பட்டு, சுவாமி பராசக்தி வேலுடன் அடிவாரம் வந்தடைவாா். இதனால், காலை 11 மணி வரை மட்டுமே பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்படுவா். மலையிலிருந்து சின்னகுமாரசுவாமி சக்தி வேலுடன் வரும் சமயம், அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலிலிருந்து வள்ளி, தேவசேனா சமேதராக அருள்மிகு முத்துக்குமாரசுவாமி மயில் வாகனத்தில் அடிவாரம் வந்தடைவாா். திருஆவினன்குடி அருள்மிகு குழந்தை வேலாயுத சுவாமி கோயிலுக்குச் சென்று பூஜை செய்த பிறகு, கிரி வீதியில் மாலை 6 மணிக்குப் பிறகு சூரசம்ஹாரம் நடைபெறும். இரவு வெற்றி விழா கொண்டாடப்பட்டு, மலைக் கோயில் சுத்தம் செய்யப்பட்டு, அா்த்த ஜாம பூஜை நடத்தப்படும்.