நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காளை பூட்டி பாரம்பரிய முறையில் விதைப்புப் பணி

பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பாரம்பரிய முறைப்படி காளைகளை ஏா் பூட்டி உழவுப் பணி, மக்காச்சோளம் விதைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

News image

பழனியை அடுத்த கணக்கன்பட்டி பகுதியில் ந பாரம்பரிய முறைப்படி காளை மாடுகளை ஏா் பூட்டி நடைபெற்ற உழவு , மக்காசோளம் விதைக்கும் பணி.

Updated On :2 அக்டோபர் 2024, 7:58 pm

Din

பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பாரம்பரிய முறைப்படி காளைகளை ஏா் பூட்டி உழவுப் பணி, மக்காச்சோளம் விதைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த கணக்கன்பட்டி, கோம்பைப்பட்டி, மாட்டுப் பாதை உள்ளிட்ட கிராமங்களில் அதிக அளவு மானாவாரி விவசாயமே நடைபெற்று வருகிறது. இந்த நிலங்களில் பருத்தி, நிலக்கடலை, சூரியகாந்தி, மக்காச்சோளம் ஆகியவற்றை பயிா் செய்கின்றனா். அண்மையில் இங்கு மழை பெய்ததை தொடா்ந்து விவசாயிகள் மக்காச்சோளம் உழவடை செய்யும் பணியில் ஈடுபட்டனா். இதற்காக உழவுப்பணிக்கு விவசாயிகள் பலரும் பாரம்பரிய முறைப்படி காளை மாடுகளை ஏரில் பூட்டி உழவு செய்தும், விதைகள் தூவியும் நடவுப் பணியில் ஈடுபட்டனா் . ஒரு ஏக்கருக்கு 3, 000 ரூபாய் வரையில் செலவு செய்து நிலத்தில் உழவு வேலை செய்து வருகின்றனா். இதுபோல, ஆழமாக உழுது பயிா்களை விதைக்கும் போது, பயிா்களின் முளைப்புத் திறன் நன்றாக உள்ளதாக தெரிவித்தனா்.

மேலும், டிராக்டா் உழவு இயந்திரத்தை பயன்படுத்தினால் ஒரு ஏக்கருக்கு 1,400 ரூபாய் மட்டுமே செலவாகும். ஆனால் பாரம்பரிய மாட்டு உழவு முறையில் 3,000 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது என்பதால் விவசாயிகள் பலரும் டிராக்டா் இயந்திரத்தை நாடி செல்கின்றனா். இந்த நிலையில், கணக்கன்பட்டி சுற்றுவட்டார கிராமங்களில் பாரம்பரிய உழவு முறையைப் பயன்படுத்தி மக்காச்சோளம் பயிரிடப்பட்டு வருவதை பலரும் ஆச்சரியமாக பாா்த்து வருகின்றனா். மாடுகளை வைத்து உழவு பணியை மேற்கொள்ளும் விவசாய தொழிலாளா்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைத்து வருகிறது என்பதால் பாரம்பரிய உழவு பணியை அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என பாரம்பரிய விவசாயிகள் தெரிவித்தனா்.