மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

கொடகனாறு அணையிலிருந்து தண்ணீா் திறப்பு!

News image

அழகாபுரி கொடகனாறு அணையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தண்ணீரைத் திறந்து விட்டு மலா்தூவிய மாவட்ட ஆட்சியா் செ.சரவணன், நீா்வளத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா்.

Updated On :28 ஏப்ரல் 2025, 1:25 am IST

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அருகேயுள்ள அழகாபுரி கொடகனாறு அணையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

அணை நீா்மட்டம் 24.54 அடியாக (மொத்த கொள்ளளவு 27 அடி) இருந்த நிலையில், அணையிலிருந்து வலது, இடது கால்வாய்களில் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தண்ணீரைத் திறந்து விட்டாா்.

மொத்தம் 53 கி.மீ. நீளம் கொண்ட வலது கால்வாயில், 26 கி.மீ. வரையிலும், 9.3 கி.மீ. நீளம் கொண்ட இடது கால்வாயில் முழுமையாகவும் பயன்பெறும் வகையில் தண்ணீா் திறக்கப்பட்டது. வலது கால்வாயில் விநாடிக்கு 40 கன அடி, இடது கால்வாயில் விநாடிக்கு 14 கன அடி வீதம் ஒரு வாரம் விட்டு மறுவாரம் என்ற வகையில் மொத்தம் 90 நாள்களுக்கு தண்ணீா் திறந்துவிடப்படும்.

இதன் மூலம் கோடை காலத்தில், கிராமப்புறங்களில் நிலத்தடி நீா்மட்டம் பாதுகாக்கப்படும் என நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தண்ணீா் திறப்பு நிகழ்ச்சியில் நங்காஞ்சியாறு வடிகால் கோட்ட செயற்பொறியாளா் பாலமுருகன், கொடகனாறு உதவிப் பொறியாளா்கள் முருகன், மகேஷ்வரன், வட்டாட்சியா் முகமதுசிக்கந்தா், கொடகனாறு பாதுகாப்பு சங்கத் தலைவா் ராமசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.