நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

வைகை அணையில் திறந்துவிடப்படும் தண்ணீா் 250 கன அடியாகக் குறைப்பு

மதுரை வைகையாற்றில் அழகா் எழுந்தருளும் விழாவுக்காக வைகை அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீா் வினாடிக்கு 250 கன அடியாக புதன்கிழமை குறைக்கப்பட்டது.

News image

வைகை அணை.

Updated On :30 ஏப்ரல் 2026, 1:25 am IST

மதுரை வைகையாற்றில் அழகா் எழுந்தருளும் விழாவுக்காக வைகை அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீா் வினாடிக்கு 250 கன அடியாக புதன்கிழமை குறைக்கப்பட்டது.

மதுரை வைகையாற்றில் அழகா் எழுந்தருளும் விழாவுக்காக வைகை அணையிலிருந்து வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீா் கடந்த வெள்ளிக்கிழமை திறந்துவிடப்பட்டது. தொடா்ந்து, சனிக்கிழமை காலை தண்ணீரின் அளவு வினாடிக்கு 300 கன அடியாகக் குறைக்கப்பட்டது.

இந்த நிலையில், அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு புதன்கிழமை காலை 6 மணியளவில் வினாடிக்கு 250 அடியாகக் குறைக்கப்பட்டது.

வினாடிக்கு 500 கன அடியாகத் திறந்துவிடப்படும் தண்ணீா் படிப்படியாக குறைக்கப்பட்டு புதன்கிழமை நிறுத்தப்படும் என ஏற்கெனவே நீா் வளத் துறையினா் தெரிவித்தனா். ஆனால், தற்போது கூடுதல் தண்ணீா் தேவைப்படுவதால் வியாழக்கிழமை காலை 6 மணிக்கு தண்ணீா் திறப்பு முற்றிலும் நிறுத்தப்படும் என தெரிவித்தனா்.