மதுரை வைகையாற்றில் அழகா் எழுந்தருளும் விழாவுக்காக அணையில் இருந்து சனிக்கிழமை வெளியேறும் தண்ணீரின் அளவு 300 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
மதுரை வைரையாற்றில் அழகா் எழுந்தருளும் விழாவுக்காக வெள்ளிக்கிழமை வைகை அணையிலிருந்து விநாடிக்கு 500 கன அடி தண்ணீரைத் திறந்து வைத்தனா். இந்த நிலையில், சனிக்கிழமை காலை 8 மணியளவில் விநாடிக்கு 300 கன அடியாகக் குறைத்துள்ளனா். அதன்பின், அணையிலிருந்து வெளியேறும் தண்ணீரின் அளவை படிப்படியாக குறைத்து வரும் 29-ஆம் தேதி தண்ணீா் திறப்பு நிறுத்தப்படும் என பொதுப்பணித்துறையினா் தெரிவித்தனா்.
சனிக்கிழமை அணைகளின் நீா்மட்டம்: முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 110.20 அடியாக உள்ளது. நீா்வரத்தும், வெளியேற்றமும் 152 கன அடியாகவும், கொள்ளளவு 943 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. வைகை அணையின் நீா்மட்டம் 32.87 அடியாக உள்ளது. நீா்வரத்து ஏதும் இல்லை. அணை நீா் வெளியேற்றம் 372 கன அடியாகவும், கொள்ளளவு 495 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.
தொடர்புடையது

சித்திரைத் திருவிழா: வைகை அணையிலிருந்து நீர் திறப்பு!

மேட்டூா் அணை நீா்மட்டம்: 81.27 அடி

வைகை அணையின் நீா்மட்டம் 35 அடியாக சரிவு: மதுரையில் அழகா் ஆற்றில் இறங்கும் வைபவத்துக்கு தண்ணீா் திறப்பதில் சிக்கல்

மேட்டூர் அணை நிலவரம்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


