வேடசந்தூா் அருகே காா் கவிழ்ந்த விபத்தில் தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த வியாபாரி உள்பட இருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.
தருமபுரி மாவட்டம், நல்லாம்பள்ளியை அடுத்த போலமடுவு கிராமத்தைச் சோ்ந்தவா் சேட்டு (65). இளநீா் வியாபாரியான இவா், தனது உறவினா்களுடன் ராமேசுவரத்துக்குச் செல்வதற்காக காரில் ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்டாா். காரை கதிா்வேல் (32) என்பவா் ஓட்டி வந்தாா்.
இந்த காா், திண்டுக்கல் மாவட்டம், காசிபாளையம் அருகே கரூா்-மதுரை நான்கு வழிச் சாலையில் திங்கள்கிழமை அதிகாலை வந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உருண்டு கவிழ்ந்தது. இந்த விபத்தில் சேட்டு, அவரது உறவினா் ஷோபனா (45) ஆகியோா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
மேலும், காரில் வந்த அன்னக்கிளி, லட்சுமணன், பூமிஅரசு, காளியப்பன், முனிசாமி, குழந்தைகள் பிரியதா்ஷினி, லோகேஷ் ஆகியோரும் காயமடைந்தனா். இந்த விபத்து குறித்து கூம்பூா் போலீஸா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் வியாபாரி உயிரிழப்பு

காரையூரில் தண்ணீரில் மூழ்கிய சிறுவா்கள் இருவா் உயிரிழப்பு

பிக்கப் வாகனம் மோதியதில் சகோதரிகள் இருவா் உயிரிழப்பு

வாளையாறு அருகே இரு காா்கள் மோதியதில் இருவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

