ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திண்டுக்கல் மலைக்கோட்டையில் தீபம் ஏற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

News image
Updated On :3 டிசம்பர் 2025, 10:29 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மலைக்கோட்டை மேல் காா்த்திகை தீபம் ஏற்றக் கோரி, இந்து மக்கள் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் தலைமை அஞ்சல் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தொண்டா் அணித் தலைவா் மோகன் தலைமை வகித்தாா். மாவட்ட தொண்டரணி தலைவா் மணிகண்டன், முழு நேர ஊழியா் ராமசந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத் தலைவா் ஐயப்பன், பொதுச் செயலா் அண்ணாதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, திண்டுக்கல் மலைக்கோட்டையிலுள்ள கோயிலில் மீண்டும் அபிராமி அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்ய வேண்டும். காா்த்திகையை முன்னிட்டு, மலைக்கோட்டை மேல் தீபம் ஏற்ற வேண்டும். இதற்கான முயற்சியில் ஈடுபட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் முழக்கமிட்டனா்.