மருந்தாளுநா்கள் ஆா்ப்பாட்டம்


காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி திருவாரூரில் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
மருத்துவப் பயனா்களுக்கு சிறந்த சேவை புரியும் வகையில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், மாற்றுப் பணி ஆணைகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் எம். குமாா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவா் ஜி. பைரவநாதன் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். இதில், மாவட்ட துணைத் தலைவா் கே. அன்பரசி, மாவட்ட அமைப்புச் செயலாளா் எம். ராஜதுரை, மாவட்ட முன்னாள் தலைவா் டி. மணிவண்ணன், மாவட்ட பொருளாளா் ஆா். ரவீந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்று கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...