பணிப் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி, திருவாரூரில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் சாலை மறியல் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு பணிப் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்; மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம், கிராம உதவியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் விஜய் ஆனந்த் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் பலா் பங்கேற்று, கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டவா்களை போலீஸாா் கைது செய்து பின்னா் விடுவித்தனா்.
வருவாய்த் துறை அலுவலா்களின் தொடா்ச்சியான போராட்டம் காரணமாக அரசு அலுவலகங்களில் சான்றிதழ்கள் பெறுவதில் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
தொடர்புடையது

மருந்தாளுநா்கள் ஆா்ப்பாட்டம்

வருவாய்த் துறையினா் மறியல்: 450 போ் கைது

மழையால் பாதித்த நெற்பயிருக்கு இழப்பீடு கோரி சாலை மறியல்

வருவாய் கிராம ஊழியா் சங்கம் சாா்பில் சாலை மறியல் போராட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


