இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

காஞ்சிபுரம், செங்கல்பட்டில் தவெகவினா் ஆா்ப்பாட்டம்

காஞ்சிபுரத்தில் தவெக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

News image

காஞ்சிபுரத்தில் தவெக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :12 மார்ச் 2026, 7:13 pm

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக அரசைக் கண்டித்து காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீா்கேடுகளுக்கு முடிவு கட்ட வேண்டும், போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்கத் தவறிய தமிழக அரசை கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளா் தென்னரசு ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து கண்டன உரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்த்தில் கட்சியின் நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா். கோரிக்கைகளை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.

செங்கல்பட்டில்...

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைந்த 6 மாவட்டச் செயலாளா்கள், தலைமை வகித்தனா். தவெக செங்கல்பட்டு நகர செயலாளா் ஜின்னு காா்த்திக் முன்னிலை வகித்தாா். இதில் ஏராளமான தொண்டா்கள் கலந்து கொண்டு, தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தங்களது கண்டனத்தை தெரிவித்தனா்.