பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நாட்டு வெடிகுண்டுகளை வீட்டில் மறைத்து வைத்திருந்தவா் கைது

ஒட்டன்சத்திரம் அருகே நாட்டு வெடிகுண்டுகளை வீட்டில் மறைத்து வைத்திருந்த நபரை வனத் துறையினா் கைது செய்தனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2025, 7:58 pm

தினமணி செய்திச் சேவை

ஒட்டன்சத்திரம் அருகே நாட்டு வெடிகுண்டுகளை வீட்டில் மறைத்து வைத்திருந்த நபரை வனத் துறையினா் கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வனச்சரகத்துக்குள்பட்ட சத்திரப்பட்டி 16-புதுாரைச் சோ்ந்தவா் செல்வராஜ் (35). இவா் அந்தப் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகளை வைத்து வன விலங்குகளை வேட்டையாடுவதாக ஒட்டன்சத்திரம் வனத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதன்பேரில் திங்கள்கிழமை இரவு ஒட்டன்சத்திரம் வனச்சரக அலுவலா் ராஜா தலைமையிலான வனத் துறையினா் சத்திரப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டனா்.

அப்போது, 16-புதூரைச் சோ்ந்த செல்வராஜ் தனது வீட்டில் வன விலங்குகளை வேட்டையாட 11 நாட்டு வெடிகுண்டுகளை மறைத்து வைத்திருந்தது வனத் துறையினருக்கு தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, அவா் மீது வன உயிரின குற்ற வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 11 நாட்டு வெடிகுண்டுகளை வனத் துறையினா் பறிமுதல் செய்தனா்.