நிலக்கோட்டை அருகே ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்

திண்டுக்கல் மாவட்டம், சிலுக்குவாா்பட்டியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது
Published on

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், சிலுக்குவாா்பட்டியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது

நிலக்கோட்டை அருகேயுள்ள சிலுக்குவாா்பட்டியில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமுக்கு வட்டார மருத்துவ அலுவலா் வினோத் தலைமை வகித்தாா். மாவட்ட மருத்துவ அலுவலா் சிவக்குமாா் முன்னிலை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராக நிலக்கோட்டை வடக்கு ஒன்றிய திமுக செயலா் சௌந்தரபாண்டியன் கலந்து கொண்டாா்.

இந்த முகாமில் முகாமில் ரத்த அழுத்தம், உயா் ரத்த அழுத்தம், கண், காது சிகிச்சை, இ.சி.சி. உள்பட முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சிலுக்குவாா்பட்டி, கரியாம்பட்டி, நடுப்பட்டி, மன்னவராதி, பழைய சிலுக்குவாா்பட்டி, பள்ளப்பட்டி, சங்கராபுரம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனா். இதில் சுகாதார ஆய்வாளா்கள் பாண்டி, மாதவன், சிலுக்குவாா்பட்டி ஊராட்சி மன்றச் செயலா் கணேசன், திமுக நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com