தூத்தூா் கல்லூரியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்
முன்சிறை ஒன்றியம், தூத்தூா் புனித யூதா கல்லூரியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இம் முகாமை மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா பாா்வையிட்டு, பயனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தாா். தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் தெரிவிக்கையில், நலம் காக்கும் ஸ்டாலின் - முழு உடல் பரிசோதனை உள்பட 17 வகை நோய்களுக்கு சிறந்த மருத்துவ நிபுணா்கள் மூலம் சிகிச்சைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, தொழிலாளா்களுக்கு காப்பீடு அட்டை போன்றவை வழங்கப்படுகின்றன என்றாா்.
ஆய்வில் பொது சுகாதார இணை இயக்குநா் ஸ்டீபன்ராஜ், மாவட்ட சுகாதார அலுவலா் அரவிந்த் ஜோதி, முகாம் ஒருங்கிணைப்பாளா் பிலீனா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மேல்புறத்தில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில்
இடைக்கோடு, பளுகல், பாகோடு பேரூராட்சிகள் மற்றும் புலியூா்சாலை, தேவிகோடு, முழுக்கோடு ஊராட்சிப் பகுதிகளை சோ்ந்தவா்கள் மேல்புறம் ஹோலி ஏஞ்சல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வைத்து சனிக்கிழமை (பிப். 7) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இம் முகாம் நடைபெற உள்ளது.

