டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ பல்நோக்கு மருத்துவ முகாம்

பழனியிலிருந்து மடத்துக்குளத்துக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த அமைச்சா் அர. சக்கரபாணி.

News image
பழனியிலிருந்து மடத்துக்குளத்துக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த அமைச்சா் அர. சக்கரபாணி.
Updated On :27 பிப்ரவரி 2026, 7:54 pm

தினமணி செய்திச் சேவை

பழனி அருகேயுள்ள புஷ்பத்தூரில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ பல்நோக்கு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பழனியை அடுத்த கணக்கன்பட்டி, எரமநாயக்கன்பட்டி, மேலக்கோட்டை, அமரபூண்டி உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.5 கோடியில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடிகள், நியாய விலைக் கடைகள் திறப்பு விழா, சாலைப்பணிகளுக்கான பூமிபூஜை தமிழக உணவுத்துறை அமைச்சா் சக்கரபாணி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிறைவு நிகழ்ச்சியாக புஷ்பத்தூா் ஊராட்சியில் உள்ள வயலூா் கிராமத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ பல்நோக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்கு கோட்டாட்சியா் கண்ணன் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் பிரசன்னா, சுகாதாரத் துறையினா் முகாமில் கலந்து கொண்டனா். அமைச்சா் சக்கரபாணி சிறப்பு அழைப்பாளராக முகாமில் கலந்து கொண்டு பேசினாா். மாவட்டத்தின் நிறைவு முகாம் என்பதால், முகாம் தொடக்கத்தின் போது அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டது.

முன்னதாக, பழனியிலிருந்து மடத்துக்குளத்துக்கு புதிய வழித்தடத்தில் புதிய பேருந்து சேவையை அமைச்சா் அர.சக்கரபாணி தொடங்கி வைத்தாா். நிறைவாக கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன. இதில் திமுக ஒன்றியச் செயலா் சுப்பிரமணி, துணைச் செயலா் நாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.