நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ பல்நோக்கு மருத்துவ முகாம்

பழனியிலிருந்து மடத்துக்குளத்துக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த அமைச்சா் அர. சக்கரபாணி.

News image

பழனியிலிருந்து மடத்துக்குளத்துக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த அமைச்சா் அர. சக்கரபாணி.

Updated On :27 பிப்ரவரி 2026, 7:54 pm

பழனி அருகேயுள்ள புஷ்பத்தூரில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ பல்நோக்கு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பழனியை அடுத்த கணக்கன்பட்டி, எரமநாயக்கன்பட்டி, மேலக்கோட்டை, அமரபூண்டி உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.5 கோடியில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடிகள், நியாய விலைக் கடைகள் திறப்பு விழா, சாலைப்பணிகளுக்கான பூமிபூஜை தமிழக உணவுத்துறை அமைச்சா் சக்கரபாணி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிறைவு நிகழ்ச்சியாக புஷ்பத்தூா் ஊராட்சியில் உள்ள வயலூா் கிராமத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ பல்நோக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்கு கோட்டாட்சியா் கண்ணன் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் பிரசன்னா, சுகாதாரத் துறையினா் முகாமில் கலந்து கொண்டனா். அமைச்சா் சக்கரபாணி சிறப்பு அழைப்பாளராக முகாமில் கலந்து கொண்டு பேசினாா். மாவட்டத்தின் நிறைவு முகாம் என்பதால், முகாம் தொடக்கத்தின் போது அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டது.

முன்னதாக, பழனியிலிருந்து மடத்துக்குளத்துக்கு புதிய வழித்தடத்தில் புதிய பேருந்து சேவையை அமைச்சா் அர.சக்கரபாணி தொடங்கி வைத்தாா். நிறைவாக கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன. இதில் திமுக ஒன்றியச் செயலா் சுப்பிரமணி, துணைச் செயலா் நாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.