ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் எரிந்து சேதம்

News image
Updated On :9 நவம்பர் 2025, 10:59 pm

தினமணி செய்திச் சேவை

நிலக்கோட்டை காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தன.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை காவல் நிலையத்தில் விபத்து, சட்ட விரோத செயல்களில் ஈடுபட பயன்படுத்தப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் காவல் நிலையம் எதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், அந்த வாகனங்கள் திடீரென தீப்பற்றி எரிந்தன. உடனடியாக நிலக்கோட்டை போலீஸாா் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலக்கோட்டை தீயணைப்புத் துறையினா் சுமாா் ஒரு மணி நேரம்  போராடி தீயை அணைத்தனா்.

இதில், பெரும்பாலான வாகனங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்து குறித்து காவல்துறையினா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.