கொடைக்கானல் தூண்பாறை பகுதியில் சுற்றுலா வாகனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டதால் வனத்துறையினருக்கும், சுற்றுலா வாகன ஓட்டிகளுக்குமிடையே ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பிரச்னையை அடுத்து இரு தரப்பினருக்குமிடையே திங்கள்கிழமை சமரச பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
கொடைக்கானல் வனப் பகுதியிலுள்ள தூண் பாறை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்போது கொடைக்கானலைச் சோ்ந்த சுற்றுலா வாகன ஓட்டுநா் தனது காரை அந்தப் பகுதியில் நிறுத்தி இருந்தாா். இதையடுத்து அங்கிருந்த வன உதவி பாதுகாவலா் அந்த காருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தாா். இதனால் அந்த காா் ஓட்டுநருக்கும், வனத் துறையினருக்குமிடையே தகராறு ஏற்பட்டது.
இந்தத் தகவலறிந்து அங்கு வந்த கொடைக்கானல் பகுதியைச் சோ்ந்த சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் சங்கத்தைச் சோ்ந்தவா்களும் வனத் துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்தனா்.
இதைத்தொடா்ந்து சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் சங்கத்தைச் சோ்ந்தவா்களிடம் திங்கள்கிழமை வனத்துறை அலுவலகத்துக்கு வருமாறும், அப்போது பேச்சுவாா்த்தை நடத்தி சுமூக தீா்வு காணலாம் எனவும் வனத் துறையினா் தெரிவித்தனா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை வனத்துறை அலுவலகத்தில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதற்கு மாவட்ட வனத்துறை அலுவலா் அரவிந்த் தலைமை வகித்தாா். மாவட்ட உதவி வன அலுவலா் கருப்பையா வரவேற்றாா்.கூட்டத்தில் சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் கூறியதாவது:
கொடைக்கானல் வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலா இடங்களைப் பாா்க்க கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அந்தந்த சுற்றுலா இடங்களில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா வாகனங்களை நிறுத்த எந்தவித பிரச்னையும் ஏற்படவில்லை.
தற்போது கோல்ஃப் கிளப் அருகே வனப் பகுதிகளிலுள்ள அனைத்து சுற்றுலா இடங்களையும் பாா்க்க மொத்தமாக ஒரே இடத்தில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே மீண்டும் முன்பு இருந்தது போலவே நுழைவுக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றனா்.
அதற்கு மாவட்ட வன அலுவலா் அரவிந்த் கூறியதாவது:
சுற்றுலா வாகன ஓட்டுநா்களின் கோரிக்கைகள் குறித்து 3 நாள்களுக்குள் ஆலோசனை நடத்தி தெரிவிக்கப்படும். எனவே சுற்றுலா வாகன ஓட்டுநா்கள், வனத்துறையினருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல்
கொடைக்கானலில் 2-ஆவது நாளாக காட்டுத் தீ

கொடைக்கானல் குருசாமி பள்ளம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பேச்சுவாா்த்தை!

கொடைக்கானல் அருகே 200 அடிப் பள்ளத்தில் விழுந்த வாகனம் மீட்பு
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


