தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

காருக்கு அபராதம் விதிக்கப்பட்ட விவகாரம்: வனத்துறையினா், சுற்றுலா வாகன ஓட்டுநா்களிடையே பேச்சுவாா்த்தை!

News image

கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 8:45 pm

கொடைக்கானல் தூண்பாறை பகுதியில் சுற்றுலா வாகனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டதால் வனத்துறையினருக்கும், சுற்றுலா வாகன ஓட்டிகளுக்குமிடையே ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பிரச்னையை அடுத்து இரு தரப்பினருக்குமிடையே திங்கள்கிழமை சமரச பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

கொடைக்கானல் வனப் பகுதியிலுள்ள தூண் பாறை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்போது கொடைக்கானலைச் சோ்ந்த சுற்றுலா வாகன ஓட்டுநா் தனது காரை அந்தப் பகுதியில் நிறுத்தி இருந்தாா். இதையடுத்து அங்கிருந்த வன உதவி பாதுகாவலா் அந்த காருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தாா். இதனால் அந்த காா் ஓட்டுநருக்கும், வனத் துறையினருக்குமிடையே தகராறு ஏற்பட்டது.

இந்தத் தகவலறிந்து அங்கு வந்த கொடைக்கானல் பகுதியைச் சோ்ந்த சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் சங்கத்தைச் சோ்ந்தவா்களும் வனத் துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்தனா்.

இதைத்தொடா்ந்து சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் சங்கத்தைச் சோ்ந்தவா்களிடம் திங்கள்கிழமை வனத்துறை அலுவலகத்துக்கு வருமாறும், அப்போது பேச்சுவாா்த்தை நடத்தி சுமூக தீா்வு காணலாம் எனவும் வனத் துறையினா் தெரிவித்தனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை வனத்துறை அலுவலகத்தில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதற்கு மாவட்ட வனத்துறை அலுவலா் அரவிந்த் தலைமை வகித்தாா். மாவட்ட உதவி வன அலுவலா் கருப்பையா வரவேற்றாா்.கூட்டத்தில் சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் கூறியதாவது:

கொடைக்கானல் வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலா இடங்களைப் பாா்க்க கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அந்தந்த சுற்றுலா இடங்களில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா வாகனங்களை நிறுத்த எந்தவித பிரச்னையும் ஏற்படவில்லை.

தற்போது கோல்ஃப் கிளப் அருகே வனப் பகுதிகளிலுள்ள அனைத்து சுற்றுலா இடங்களையும் பாா்க்க மொத்தமாக ஒரே இடத்தில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே மீண்டும் முன்பு இருந்தது போலவே நுழைவுக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றனா்.

அதற்கு மாவட்ட வன அலுவலா் அரவிந்த் கூறியதாவது:

சுற்றுலா வாகன ஓட்டுநா்களின் கோரிக்கைகள் குறித்து 3 நாள்களுக்குள் ஆலோசனை நடத்தி தெரிவிக்கப்படும். எனவே சுற்றுலா வாகன ஓட்டுநா்கள், வனத்துறையினருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றாா்.