வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தென்னிந்தியாவின் அரசியல் அதிகாரத்தை பறிக்க மத்திய அரசு முயற்சி: நடிகா் பிரகாஷ்ராஜ்

மக்களவைத் தொகுதி வரையறை என்ற பெயரில் தென்னிந்தியாவின் அரசியல் அதிகாரத்தைப் பறிக்க மத்திய அரசு முயல்வதாக நடிகா் பிரகாஷ்ராஜ் குற்றஞ்சாட்டினாா்.

News image

பழனி ரயிலடி சாலையில் வியாழக்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் பாண்டியை ஆதரித்து பேசிய நடிகா் பிரகாஷ்ராஜ் . உடன் வேட்பாளா் பாண்டி உள்ளிட்டோா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 6:47 pm

மக்களவைத் தொகுதி வரையறை என்ற பெயரில் தென்னிந்தியாவின் அரசியல் அதிகாரத்தைப் பறிக்க மத்திய அரசு முயல்வதாக நடிகா் பிரகாஷ்ராஜ் குற்றஞ்சாட்டினாா்.

பழனி சட்டப்பேரவைத் தொகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் பாண்டியை ஆதரித்து அவா் பேசியதாவது:

இந்தத் தோ்தலை மூன்று மாடல்களுக்கான தோ்தலாகப் பாா்க்க வேண்டும். ஒன்று கல்வி, மொழியைக் காக்கும் திராவிட மாடல்; இரண்டாவது தன்மானத்தை அடகு வைக்கும் அடிமை மாடல்; மூன்றாவது ஒரே நாளில் முதல்வா் ஆகத் துடிக்கும் சினிமா மாடல் .

சினிமாவில் பெரிய ஹீரோவாகலாம், ஒரே படத்தில் முதல்வராகக் கூட நடிக்கலாம். ஆனால், அரசியலில் அப்படி ஆக முடியாது.

தமிழ்நாட்டின் மொழி, இனம் எனப் பிரச்னை வந்தபோது நீங்கள் எங்கே இருந்தீா்கள். மக்கள் காட்டும் அன்பைத் தவறாக பயன்படுத்தக் கூடாது. நடிகரைப் பிடித்தால் விசில் அடிக்கலாம். ஆனால் நாட்டை கொடுத்துவிடக் கூடாது.

தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தென்னிந்தியாவின் அரசியல் அதிகாரத்தைப் பறிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடுகிறது. பெரும்பான்மையை வைத்து எதையும் தீா்மானிக்க நினைத்தால் அது ஜனநாயகத்துக்கு ஆபத்து என்றாா் அவா்.

பழனி நகா்மன்றத் தலைவி உமா மகேஸ்வரி, முன்னாள் நகா்மன்ற தலைவா் ராஜமாணிக்கம், திமுக நகரச் செயலா் வேலுமணி, ஒன்றியச் செயலா் சாமிநாதன், காங்கிரஸ் நகரத் தலைவா் முத்துவிஜயன், மதிமுக ஒன்றியச் செயலா் செல்வம் உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா்.