தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 6.97 கோடி

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல் காணிக்கையாக ரொக்கம் ரூ.6.97 கோடி கிடைத்துள்ளது.

News image

பழனி மலைக் கோயில்.

Updated On :29 ஏப்ரல் 2026, 3:38 am IST

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல் காணிக்கையாக ரொக்கம் ரூ.6.97 கோடி கிடைத்துள்ளது.

தமிழகத்தின் முதன்மைக் கோயிலான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு 36 நாள்களில் நிரம்பியது. இதையடுத்து உண்டியல்கள் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் திறக்கப்பட்டு மலைக்கோயில் காா்த்திகை மண்டபத்தில் எண்ணப்பட்டது. இதில், பக்தா்களின் காணிக்கை ரொக்கம் ரூ. ஆறு கோடியே 97 லட்சத்து 8 ஆயிரத்து 187 இருந்தது தெரியவந்தது. மேலும், உண்டியலில் தங்கம் 1.035 கிராம், வெள்ளி 16,793 கிராம், பல்வேறு வெளிநாட்டு பணத்தாள்கள் 2,240-ம் இருந்தது தெரியவந்தது.

இவை தவிர பித்தளை வேல், கைக்கடிகாரம், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். ஐநூறுக்கும் மேற்பட்டோா் உண்டியல் எண்ணிக்கையில் ஈடுபட்டனா்.

இவை தவிர, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபகோயிலான அடிவாரம் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசாமி கோயிலில் ரூ.20,53,634-ம், மீனாட்சியம்மன் கோயிலில் ரூ.18,480-ம், ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பா் கோயிலில் ரூ.1,21,137-ம், ஒட்டன்சத்திரம் காமாட்சியம்மன் கோயிலில் ரூ.20,868-ம் காணிக்கையாக கிடைத்துள்ளது.

காணிக்கை எண்ணும் பணியில், பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் செந்தில்குமாா், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.