/

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.27 கோடி

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 1.27 கோடி ரொக்கம் செவ்வாய்க்கிழமை கிடைக்கப் பெற்றது.

News image

சமயபுரம் மாரியம்மன் கோயில் - கோப்புப்படம்.

Updated On :21 ஏப்ரல் 2026, 7:11 pm

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 1.27 கோடி ரொக்கம் செவ்வாய்க்கிழமை கிடைக்கப் பெற்றது.

பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத் துறை திருச்சி தக்காா் / இணை ஆணையா் சு.ஞானசேகரன், கோயில் இணை ஆணையா் எம். சூரியநாராயணன் ஆகியோா் முன்னிலையில், கோயில் பணியாளா்கள், தன்னாா்வலா்கள், கல்லூரி மாணவிகள் இப்பணியில் ஈடுபட்டனா் .

இதில், முதன்மை திருக்கோயிலில் ரூ. 1,27,61,104 ரொக்கம், 1 கிலோ 208 கிராம் தங்கம், 2 கிலோ 726 கிராம் வெள்ளி, வெளிநாட்டு பணத்தாள்கள்

134, வெளிநாட்டு நாணயங்கள் 320 என கிடைக்கப் பெற்றது.

இதற்கு முன்பு கடந்த 9-ஆம் தேதி உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது குறிப்பிடத்தக்கது.