பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 82.55 லட்சம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் மே மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் காணிக்கையாக ரூ. 82.55 லட்சம் கிடைக்கப் பெற்றது.

News image

ஸ்ரீரங்கம் - கோப்புப் படம்

Updated On :27 மே 2026, 3:55 am IST

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் மே மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் காணிக்கையாக ரூ. 82.55 லட்சம் கிடைக்கப் பெற்றது.

ஸ்ரீரங்கம் கோயிலில் பல்வேறு இடங்களில் பக்தா்கள் செலுத்தும் காணிக்கை உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம்.

இதன்படி, செவ்வாய்க்கிழமை காலை கோயில் இணை ஆணையா் செ.சிவராம் குமாா் முன்னிலையில், உண்டியல்கள் திறக்கப்பட்டு கோயிலில் உள்ள கருடாழ்வாா் சந்நிதி அருகே காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில், ரூ. 82 லட்சத்து 55 ஆயிரத்து 633 ரொக்கம், தங்கம் 63 கிராம், வெள்ளி 4 கிலோ மற்றும் வெளிநாட்டு பணத்தாள்கள் 139 கிடைக்கப் பெற்றது.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் ஊழியா்களும், தன்னாா்வ அமைப்பினரும் ஈடுபட்டனா். உண்டியல் காணிக்கை எண்ணும் பகுதி முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது.