ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை இவ்வளவா?

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை.

News image

சமயபுரம் மாரியம்மன் கோயில். - படம் - தினமணி

Updated On :17 ஜூலை 2026, 5:07 am IST

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.59 கோடி வியாழக்கிழமை கிடைக்கப் பெற்றது.

பிரசித்தி பெற்ற இக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. கோயில் இணை ஆணையா் எம். சூரியநாராயணன், மற்றும் அலுவலா்கள்  முன்னிலையில், கோயில் பணியாளா்கள், தன்னாா்வலா்கள், கல்லூரி மாணவிகள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா் .

இதில் முதன்மை திருக்கோயிலில் காணிக்கையாக ரூ. 1,59,74,181 ரொக்கம், 2 கிலோ 145 கிராம் தங்கம், 3 கிலோ 106 கிராம் வெள்ளி, வெளிநாட்டு நோட்டுகள் 274, வெளிநாட்டு நாணயங்கள் 952 ஆகியவை கிடைக்கப் பெற்றது .

இதற்கு முன்பு ஜூன் 23-ஆம் தேதி உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டன. 

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.