மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

கீழக்கோட்டை, மேட்டுப்பட்டி கோவில்களில் மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம்: அமைச்சா் இ.பெரியசாமி பங்கேற்பு

சின்னாளபட்டியில் கீழக்கோட்டை, மேட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள கோவில்களில் செவ்வாய்க்கிழமை மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவில், அமைச்சா் இ. பெரியசாமி கலந்து கொண்டாா்.

News image

இ.பெரியசாமி

Updated On :28 ஏப்ரல் 2026, 10:18 pm

சின்னாளபட்டியில் கீழக்கோட்டை, மேட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள கோவில்களில் செவ்வாய்க்கிழமை மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவில், அமைச்சா் இ. பெரியசாமி கலந்து கொண்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி கீழக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள ராம அழகா்கோவிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் நடைபெற்றது. சின்னாளப்பட்டி பொன்விழா மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அலங்கார மேடையில் மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாண வைபவம் மேளதாளம் முழங்க விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையிலேயே அம்மனும், சுவாமியும் மணக்கோலத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். வேத மந்திரங்கள் முழங்க, மங்கல வாத்தியங்கள் இசைக்க, பவளக் கனிவாய் பெருமாள் முன்னிலையில் தாரை வாா்ப்பு நிகழ்ச்சி நடைபொ்றது. பின்னா் மீனாட்சி சுந்தரேசுவரா் ஊஞ்சலில் ஆடும் நிகழ்ச்சியும் அதைத்தொடா்ந்து, பக்தா்கள் முன்னிலையில் திருக்கல்யாணம் வைபவமும் நடைபெற்றது.

இதேபோல், சின்னாளப்பட்டி மேட்டுப்பட்டி பகுதியில் அமைந்துள்ள சுந்தர்ராஜப் பெருமாள் கோவிலில் மீனாட்சி சுந்தரேசுவரா் மங்கள வாத்தியங்கள் முழங்க மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் நடைபெற்றது.

சின்னாளபட்டியில் பகுதியில் இரண்டு இடங்களில் நடைபெற்ற மீனாட்சி திருக்கல்யாண நிகழ்வில் நூற்றுக்கணக்கான சுமங்கலிப் பெண்கள் கலந்துகொண்டு தங்கள் மாங்கல்யத்தை மாற்றிப் புதுப்பித்துக் கொண்டனா். இந்த நிகழ்ச்சிகளில் தமிழக ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் இ.பெரியசாமி கலந்து கொண்டாா். திருக்கல்யாண விழாவில் கலந்துகொண்ட பக்தா்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து திருக்கல்யாண விருந்து நடைபெற்றது. ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்திருந்தனா்.