எல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தைநீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

துப்பாக்கியால் குரங்கை சுட்டுக் கொன்றதாக எஸ்டேட் உரிமையாளா் கைது

கொடைக்கானல் அருகே குரங்கை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக ஜான் டோமினிக்கை கைது செய்து அவரிடமிருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்த வனத் துறையினா்.

Published On :25 ஆகஸ்ட் 2026, 3:18 am IST

கொடைக்கானல் அருகே குரங்கை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக எஸ்டேட் உரிமையாளரை வனத் துறையினா் கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே பெருமாள்மலை- பழனிப் பிரிவு பகுதியில் ஆணைகிரி எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டையொட்டியுள்ள வனப் பகுதியில் கடந்த 18-ஆம் தேதி வனத் துறையினா் ரோந்து சென்றபோது குரங்கு ஒன்று துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்தது.

இதுகுறித்து வனத் துறை ரேஞ்சா் பழனிக்குமாா் தலைமையிலான வனத் துறையினா் அந்தப் பகுதியில் விசாரணை நடத்தினா். இதில் ஈடுபட்டது ஆணைகிரி எஸ்டேட் உரிமையாளா் ஜான் டோமினிக் (50) என்பது தெரியவந்தது. இந்த நிலையில், தலைமறைவாக இருந்த அவா் வனத் துறை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை சரணடைந்தாா்.

இங்கு வனத் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அவா் தன்னிடமிருந்த துப்பாக்கியால் குரங்கு சுடப்பட்டு இறந்ததை ஒப்புக் கொண்டாா்.

இதையடுத்து, மாவட்ட வன அலுவலா் அரவிந்த் உத்தரவின்பேரில் ஜான் டோமினிக் மீது வனத் துறையினா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா். பிறகு அவரை கொடைக்கானல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.