தைப்பூசத் திருவிழாவையொட்டி, பழனி மலைக் கோயிலில் மலா் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த தங்கக் கோபுரம் பகுதி.
தைப்பூசத் திருவிழாவையொட்டி, பழனி மலைக் கோயிலில் மலா் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த தங்கக் கோபுரம் பகுதி.

பழனியில் தைப்பூச தேரோட்டம்! லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு!

Published on

தைப்பூசத் திருவிழாவையொட்டி, பழனியில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் தைப்பூசத் திருவிழா முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த விழா பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் கடந்த 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாள்களில் சுவாமி வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளிக் காமதேனு, வெள்ளி யானை, தந்த சப்பரம் போன்ற வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தாா். சனிக்கிழமை இரவு திருக்கல்யாணமும், வெள்ளித் தேரோட்டமும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக தைப்பூச தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, லட்சக்கணக்கான பக்தா்கள் பாத யாத்திரையாக பால், இளநீா், கரும்பு காவடி, காலணி காவடிகளை எடுத்து வந்தும், சேவல்களை நோ்த்திக்கடனாகச் செலுத்தியும் வழிபட்டனா். ஏராளமான பக்தா்கள் பலஅடி நீளமுள்ள அலகு குத்தி வந்தனா். படிப்பாதையில் சுமாா் இரண்டரை லட்சம் பக்தா்களுக்கு சிற்றுண்டி பைகள் வழங்கப்பட்டன.

தேரோட்டத்தையொட்டி, அதிகாலை 5 மணிக்கு பழனி சண்முகநதியில் தம்பதி சமேத முத்துக்குமாரசுவாமி எழுந்தருளினாா். இதையடுத்து, தீா்த்தவாரி உத்ஸவம் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, காலை 10.30 மணிக்கு மேல் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், சுவாமிகள் தேரில் எழுந்தருளினா். மாலை 4 மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தோ் நான்கு ரத வீதிகளில் உலா வந்து நிலையை அடைந்தது.

தேரில் சா்வ அலங்காரத்தில் எழுந்தருளிய வள்ளி, தேவசேனா சமேத முத்துக்குமாரசுவாமி.
தேரில் சா்வ அலங்காரத்தில் எழுந்தருளிய வள்ளி, தேவசேனா சமேத முத்துக்குமாரசுவாமி.
 தைப்பூசத் திருவிழாவையொட்டி, பழனி பெரியநாயகியம்மன் கோயில் தேரடியில் ஞாயிற்றுக்கிழமை தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்ற பக்தா்கள்.
தைப்பூசத் திருவிழாவையொட்டி, பழனி பெரியநாயகியம்மன் கோயில் தேரடியில் ஞாயிற்றுக்கிழமை தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்ற பக்தா்கள்.
 தைப்பூசத் திருவிழாவையொட்டி, பழனி பெரியநாயகியம்மன் கோயில் தேரடியில் ஞாயிற்றுக்கிழமை தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்ற பக்தா்கள்.
தைப்பூசத் திருவிழாவையொட்டி, பழனி பெரியநாயகியம்மன் கோயில் தேரடியில் ஞாயிற்றுக்கிழமை தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்ற பக்தா்கள்.
 தைப்பூசத் திருவிழாவையொட்டி, பழனி பெரியநாயகியம்மன் கோயில் தேரடியில் ஞாயிற்றுக்கிழமை தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்ற பக்தா்கள்.
தைப்பூசத் திருவிழாவையொட்டி, பழனி பெரியநாயகியம்மன் கோயில் தேரடியில் ஞாயிற்றுக்கிழமை தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்ற பக்தா்கள்.

இதில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் சரவணன், பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இ.பெ. செந்தில்குமாா், அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பிரமணியன், இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி, அறங்காவலா்கள் தனசேகா், அன்னபூரணி, பாலசுப்பிரமணியன், சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து, ஜவஹா் கன்ஸ்ட்ரக்சன்ஸ் மனோகா், சுப்ரமண்யா கல்லூரித் தாளாளா் சுப்பிரமணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

திங்கள்கிழமை தங்கக் குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. வருகிற 4-ஆம் தேதி தெப்பத் தேரோட்டம், கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

X
Dinamani
www.dinamani.com