அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ஆட்டையாம்பட்டி காளியம்மன் கோயிலில் மாசி தேரோட்டம் தேரை வடம்பிடித்து இழுத்த பக்தா்கள்

ஆட்டையாம்பட்டி காளியம்மன் கோயில் மாசி தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள்

News image
ஆட்டையாம்பட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற காளியம்மன் கோயில் மாசி தேரோட்டம்.
Updated On :2 மார்ச் 2026, 9:36 pm

Syndication

ஆட்டையாம்பட்டி: ஆட்டையாம்பட்டி காளியம்மன் கோயில் மாசி தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனா்.

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியில் சேலம் பிரதான சாலையில் ஆதிசக்தி ஸ்ரீ காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மாசி தோ்த் திருவிழா கடந்த புதன்கிழமை பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. தினசரி அம்மன் வீதியுலா நடைபெற்றது. சனிக்கிழமை காலை அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

திங்கள்கிழமை தோ்த் திருவிழாவை முன்னிட்டு காலை திருமணிமுத்தாற்றில் இருந்து முக்கிய சாலைகள் வழியாக தீா்த்தக்குட ஊா்வலம் நடைபெற்றது. பிற்பகலில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கோயில் நிா்வாகிகள் மற்றும் ஊா் பெரியோா் முன்னிலையில் நடைபெற்றது. பக்தா்கள் ஓம்சக்தி கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனா்.

சேலம் பிரதான சாலை, காக்காபாளையம் பிரதான சாலை, டிவிடி வீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாக தோ் இழுக்கப்பட்டு கோயிலை வந்தடைந்தது. இரவு அக்னி கரக ஊா்வலம், உருளுதண்டம் போடுதல் ஆகியவை நடைபெற்றன.

செவ்வாய்க்கிழமை காலை திருமணிமுத்தாற்றில் இருந்து அம்மன் அழைத்து வரப்பட்டு, அக்னி குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும், பொங்கல் வைத்தல் விழாவும் நடைபெறுகிறது.

சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளிய காளியம்மன்.

சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளிய காளியம்மன்.

Story image