போக்குவரத்து நெரிசல் என்றாலே பெங்களூர் நினைவுக்கு வரும் அளவுக்கு பெயர்போன ஊராக மாறியிருக்கும் நிலையில், 75.6 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள், உயர்மட்ட சாலைகள் அமைக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது.
பெங்களூரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் ரூ.13,262 கோடி செலவில், 75.6 கிலோ மீட்டர் தொலைவுக்கு 11 புதிய மேம்பாலங்கள் மற்றும் உயர்மட்ட சாலைகள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதனால், பெங்களூரில் நெடுநாளாக நீடிக்கும் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. யெஷ்வந்த்பூர் முதல் கேஆர் புரம் வரையிலான 28 கிலோ மீட்டர் தொலைவுக்கும், ரகிகுட்டா - தலகட்டபுரா இடையே மற்றும் பல குறுகிய தொலைவுகளுக்கும் மேம்பாலங்களும் உயர்மட்ட சாலைகளும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போதுள்ள போக்குவரத்து நடைமுறைகளை தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் கண்காணித்து, புதிய மேம்பாலத் திட்டங்கள் போடப்பட்டுள்ளன. நகரம் முழுவதும் ஓரிடத்திலிருந்து புறப்பட்டால், சென்றடையும் இடம் வரை எந்த நெருக்கடியும் இல்லாமல் இருக்கும் வகையில் மேம்பால திட்டங்கள் போடப்பட்டுள்ளன.
பையப்பனஹள்ளி அருகே சாலைச் சந்திப்பில் மேம்பாலம் அமைக்கவும் திட்டத்தில் வழிவகுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மத்திய பெங்களூரிலிருந்து வடக்குப் பகுதிக்கு எளிதாக செல்ல முடியும். இது தவிர, இரண்டு ரயில் மேம்பாலங்களுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம், விரைவில் பெங்களூரில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணப்படும் என கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பள்ளி தர நிா்ணய ஆணையம்: துணைநிலை ஆளுநா் ஒப்புதல்

தஞ்சாவூா் அண்ணா சிலை, பா்மா பஜாரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கோரிக்கை

கரூரில் முதல்வா் ஜோசப் விஜய் 10 கி.மீ. தொலைவுக்கு சாலை வலம்

நுண்ணறிவு போக்குவரத்து திட்டத்தை ஆகஸ்ட்டில் செயல்படுத்த வேண்டும்: கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி உத்தரவு
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



