பெரியார் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை! திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!பெரியார் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதைதிருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு அஸ்ஸாம் முதல்வராக மே 12ல் பதவியேற்கிறார் ஹிமந்த பிஸ்வ சர்மா! எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலர்கள் கூட்டம்முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்தற்காலிக அவைத்தலைவராக கருப்பையா நியமனம்!அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே கடன் அளவு: முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பதில் தவெக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் நாளை (மே 11) எம்எல்ஏக்களாகப் பதவியேற்பு ஜெயித்துவிட்டதால் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்காதீர்கள்: முதல்வர் விஜய்தமிழக முதல்வராகப் பதவியேற்றார் சி. ஜோசப் விஜய்!விஜய்யைத் தொடர்ந்து தவெக எம்எல்ஏக்கள் 9 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்மக்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் முதல் கையொப்பம்!
/

பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!

பெங்களூரு போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள் அமைக்க ஒப்புதல்

News image

மேம்பாலங்கள் - பிரதிபடம் - X - image

Updated On :17 ஏப்ரல் 2026, 12:39 pm IST

போக்குவரத்து நெரிசல் என்றாலே பெங்களூர் நினைவுக்கு வரும் அளவுக்கு பெயர்போன ஊராக மாறியிருக்கும் நிலையில், 75.6 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள், உயர்மட்ட சாலைகள் அமைக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது.

பெங்களூரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் ரூ.13,262 கோடி செலவில், 75.6 கிலோ மீட்டர் தொலைவுக்கு 11 புதிய மேம்பாலங்கள் மற்றும் உயர்மட்ட சாலைகள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதனால், பெங்களூரில் நெடுநாளாக நீடிக்கும் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. யெஷ்வந்த்பூர் முதல் கேஆர் புரம் வரையிலான 28 கிலோ மீட்டர் தொலைவுக்கும், ரகிகுட்டா - தலகட்டபுரா இடையே மற்றும் பல குறுகிய தொலைவுகளுக்கும் மேம்பாலங்களும் உயர்மட்ட சாலைகளும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போதுள்ள போக்குவரத்து நடைமுறைகளை தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் கண்காணித்து, புதிய மேம்பாலத் திட்டங்கள் போடப்பட்டுள்ளன. நகரம் முழுவதும் ஓரிடத்திலிருந்து புறப்பட்டால், சென்றடையும் இடம் வரை எந்த நெருக்கடியும் இல்லாமல் இருக்கும் வகையில் மேம்பால திட்டங்கள் போடப்பட்டுள்ளன.

பையப்பனஹள்ளி அருகே சாலைச் சந்திப்பில் மேம்பாலம் அமைக்கவும் திட்டத்தில் வழிவகுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மத்திய பெங்களூரிலிருந்து வடக்குப் பகுதிக்கு எளிதாக செல்ல முடியும். இது தவிர, இரண்டு ரயில் மேம்பாலங்களுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம், விரைவில் பெங்களூரில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணப்படும் என கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.