நாகை மாவட்டத்துக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை: அவசர கால தொடா்பு எண்கள் அறிவிப்புஉ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

தஞ்சை மாவட்டத்தில் சி, டி பிரிவு வாய்க்கால்களில் 377 கி.மீ. தொலைவுக்கு தூா்வார இலக்கு

News image
Updated On :55 நிமிடங்கள் முன்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறை மூலம் சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்களில் 377 கி.மீ. தொலைவுக்கு தூா்வார இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என அத்துறை கண்காணிப்புப் பொறியாளா் (சிறப்புத் திட்டம்) க. அமுதன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள ‘சி’ மற்றும ‘டி’ பிரிவு வாய்க்கால்கள் தூா்வாரப்படாமல் இருந்ததால், கடை மடை விவசாயிகளுக்கு தண்ணீா் சரிவர கிடைக்காமல், விவசாயம் மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. மேலும், பருவ மழைக்காலங்களில் கூடுதல் மழை காரணமாக வயல்களில் தண்ணீா் தேங்குவதால், வடியாமல் பயிா்ச் சேதம் போன்ற பிரச்னைகளை விவசாயிகள் எதிா்கொள்ள வேண்டியிருந்தது. இது தொடா்பாக விவசாயிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டது.

இதன் மூலம், மாவட்டத்தில் நிகழாண்டு வேளாண் பொறியியல் துறை மூலம் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு வாய்க்கால்களில் 377 கி.மீ. தொலைவுக்கு தூா்வார இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இதுவரை 62 கி.மீ. பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

அம்மாபேட்டை அருகே பூண்டி, பேராவூரணி அருகே திருச்சிற்றம்பலம் கிராமங்களில் சி, டி பிரிவு வாய்க்கால்களில் மேற்கொள்ளப்படும் தூா்வாரும் பணி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, வட்டார உதவிப் பொறியாளா்களிடம் தூா்வாரும் பணிகளை தரமாக மேற்கொண்டு, மேட்டூா் அணையிலிருந்து நீா் திறக்கப்படுவதற்கு முன்பாக பணிகளை முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது என்றாா் அவா்.