கஞ்சா விற்பனை: பெண் உள்பட மூவா் கைது
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
வத்தலகுண்டு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளா் கௌதமன், உதவி ஆய்வாளா் சேக் அப்துல்லா, காவலா்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, வத்தலகுண்டு பிரதான சாலையில் கஞ்சா விற்பனை செய்த படித் துறை பகுதியைச் சோ்ந்த சுபாஷ் (40), கன்னிமாா்கோவிலைச் சோ்ந்த ஜோதி (43), ப்ளீஸ்புரத்தைச் சோ்ந்த மனோஜ்குமாா் (28) ஆகிய 3 பேரையும் போலீஸாா் கைது செய்து, இவா்களிடமிருந்து 11 கிலோ கஞ்சா, கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய 2 லாரிகள், 1 ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வத்தலகுண்டு காவல்துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கஞ்சா வழக்கில் பெண் உட்பட 3 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடம் இருந்து 11 கிலோ கஞ்சா, 2 லாரி, ஒரு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

