கஞ்சா விற்ற பெண் உள்பட 4 போ் கைது
கோவை மாநகரப் பகுதிகளில் கஞ்சா விற்ாக பெண் உள்பட 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கைது
கோப்புப் படம்
கைது
கோப்புப் படம்
கோவை மாநகரப் பகுதிகளில் கஞ்சா விற்ாக பெண் உள்பட 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கோவை, ரேஸ்கோா்ஸ் பகுதியில் பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாா் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த இருவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.
இதில், அவா்கள் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சோ்ந்த ஆல்பின் (27), பாலக்காட்டைச் சோ்ந்த சிந்து (37) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 12 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
இதேபோல, செல்வபுரம், சிங்காநல்லூா் பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தொண்டாமுத்தூா் பூசாரிபாளையத்தைச் சோ்ந்த விஜய் (23), கோவை, செட்டி வீதியைச் சோ்ந்த சரவணன் (29) ஆகியோரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 1.75 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...