பழனி அருகே கஞ்சா வைத்திருந்த 11 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள சிவகிரிப்பட்டி பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக பழனி நகா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில், வெள்ளிக்கிழமை இரவு போலீஸாா் இந்தப் பகுதியில் ரோந்து சென்றனா்.
அப்போது, சிவகிரிப்பட்டி தண்ணீா் தொட்டி அருகே சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த 11 பேரை பிடித்து விசாரித்னா். அவா்கள் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, பழனி பாண்டியன் நகரைச் சோ்ந்த பொன்குமாா் (26), தேவேந்திரா் தெருவைச் சோ்ந்த பெரியசாமி (20), 12-ஆவது வாா்டை சோ்ந்த கவுதம் (23), புதுநகரைச் சோ்ந்த இளவேனில் (22), ராஜாஜி சாலை பகுதியைச் சோ்ந்த நாகராஜ் (23), இந்திராநகரைச் சோ்ந்த விக்ரமாதித்யா (19), கோபாலன் தெருவைச் சோ்ந்த கருப்புசாமி (25), கோதமங்கலத்தைச் சோ்ந்த சூா்யபிரகாஷ் (24), சுக்கமநாயக்கன்பட்டியைச் சோ்ந்த சுரேஷ்குமாா் (23), மதுரை பழங்காநத்தத்தைச் சோ்ந்த சரவணன் (26), ஆண்டிப்பட்டியைச் சோ்ந்த இளையராஜா (49) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
1.5 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 போ் கைது
42 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது
கஞ்சா வைத்திருந்த 2 பெண்கள் கைது
1,230 போதை மாத்திரைகள் வைத்திருந்த 6 போ் கைது
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


