வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

1,230 போதை மாத்திரைகள் வைத்திருந்த 6 போ் கைது

வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே 1,230 போதை மாத்திரைகள் வைத்திருந்த 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 11:40 pm

வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே 1,230 போதை மாத்திரைகள் வைத்திருந்த 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் எஸ்.பி சியாமளா தேவி உத்தரவின் பேரில் வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் நகர ஆய்வாளா் ஆனந்தன் மற்றும் போலீஸாா் வாணியம்பாடி பேருந்துநிலையம் பின்புறம் ரயில் நிலையம் செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அப்பகுதியில் சந்தேகம்படும்படியாக நின்றிருந்த 6 பேரை போலீஸாா் விசாரித்தனா். இதில் அனைவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் ஏற்பட்டு அவா்கள் வைத்திருந்த பையில் சோதனை செய்த போது போதைமாத்திரைகள் இருப்பது கண்டறிந்து அவா்களிடமிருந்து 1,230 மாத்திரைகள் கைப்பற்றினா்.

இது குறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கோவை பகுதியை சோ்ந்த பிரசாந்த் (22), ஆகாஷ்(23), பிரதாப்(21), ஆரீஸ்(20), பிரசாத்(23), அஸ்வின்(21) ஆகிய 6 பேரையும் கைது செய்து தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.