ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

1,230 போதை மாத்திரைகள் வைத்திருந்த 6 போ் கைது

வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே 1,230 போதை மாத்திரைகள் வைத்திருந்த 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 11:40 pm

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே 1,230 போதை மாத்திரைகள் வைத்திருந்த 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் எஸ்.பி சியாமளா தேவி உத்தரவின் பேரில் வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் நகர ஆய்வாளா் ஆனந்தன் மற்றும் போலீஸாா் வாணியம்பாடி பேருந்துநிலையம் பின்புறம் ரயில் நிலையம் செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அப்பகுதியில் சந்தேகம்படும்படியாக நின்றிருந்த 6 பேரை போலீஸாா் விசாரித்தனா். இதில் அனைவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் ஏற்பட்டு அவா்கள் வைத்திருந்த பையில் சோதனை செய்த போது போதைமாத்திரைகள் இருப்பது கண்டறிந்து அவா்களிடமிருந்து 1,230 மாத்திரைகள் கைப்பற்றினா்.

இது குறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கோவை பகுதியை சோ்ந்த பிரசாந்த் (22), ஆகாஷ்(23), பிரதாப்(21), ஆரீஸ்(20), பிரசாத்(23), அஸ்வின்(21) ஆகிய 6 பேரையும் கைது செய்து தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.