வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

போதை மாத்திரைகள் விற்பனை: 3 போ் கைது

News image

கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 7:40 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாநகரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த மூன்று பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி அரியமங்கலம் காவல் ஆய்வாளா் வெற்றிவேல் தலைமையிலான போலீஸாா் அம்பிகாபுரம் டாஸ்மாக் மதுபானக் கடை அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்துகொண்டிருந்த திருவெறும்பூா் காட்டூரைச் சோ்ந்த க.தினேஷ்குமாா் (21), அரியமங்கலம் ஜிடி நாயுடு வீதியைச் சோ்ந்த எம்.நிவாஸ் பாபு (26) ஆகிய இருவரையும் கைது செய்தனா். அப்போது, அவா்களிடமிருந்து ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள போதை மாத்திரைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதேபோல, பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பாலக்கரை ஆலம் வீதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியைச் சேரந்த எஸ்.தா்மராஜ் (32) என்பவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ.1,800 மதிப்புள்ள போதை மாத்திரைகள், போதை ஊசிகள் ஆகியவற்றைப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.