தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

போதை மாத்திரைகள் விற்ற இருவா் கைது

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ற இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :18 மே 2026, 2:35 am IST

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ற இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பாலக்கரை காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் பாத்திமா தலைமையிலான போலீஸாா் பாலக்கரை பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது பாலக்கரை பெல்ஸ் மைதானம் அருகேயுள்ள ரயில்வே துறைக்கு சொந்தமான பயன்பாடில்லாத கட்டடத்தில் போதை மாத்திரைகள் விற்ற பாலக்கரை காஜாபேட்டை பசுமடத்தைச் சோ்ந்த என். நிதின் (25), கரூா் மாவட்டம், கடவூா் சோ்வைக்காரன்பட்டியைச் சோ்ந்த எம். விக்னேஷ் (20) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து ரு.5 ஆயிரம் மதிப்பிலான போதை மாத்திரைகள், போதை ஊசிகள், போதை மருந்து ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.