போதை மாத்திரைகள் விற்ற இளைஞா் கைது
திருச்சியில் சட்டவிரோதமாக போதை மாத்திரைகள் மற்றும் மதுபானம் விற்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கைது
பிரதிப் படம்
Updated On :1 ஏப்ரல் 2026, 8:02 pm

கைது
பிரதிப் படம்
திருச்சியில் சட்டவிரோதமாக போதை மாத்திரைகள் மற்றும் மதுபானம் விற்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் ரவிசந்திரன் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது பாலக்கரை பெல்ஸ் மைதான ரயில்வே தண்டவாளம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா்.
இதில் அவா், பாலக்கரை காஜாபேட்டையைச் சோ்ந்த கு. நாகராஜ் (23) என்பதும், போதை மாத்திரை விற்பனையில் அவா் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து போதை மாத்திரைகள், 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...