நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மாசி மாதப் பிறப்பு: பழனி மலைக் கோயில் சிறப்பு பூஜை

News image

மாசித் திருவிழாவை முன்னிட்டு, பழனி மாரியம்மன் கோயிலில் கம்பத்துக்கு வெள்ளிக்கிழமை மஞ்சள்நீா் ஊற்றி வழிபட்ட பக்தா்கள்.

Updated On :13 பிப்ரவரி 2026, 9:23 pm

மாசி மாதப் பிறப்பை முன்னிட்டு, பழனி மலைக் கோயில், மாரியம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதையொட்டி, பழனி மலைக் கோயிலில் அதிகாலை 5 மணிக்கு சந்நிதி திறக்கப்பட்டு, மூலவா் தண்டாயுதபாணிக்கு சி றப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. பிறகு, அங்குள்ள ஆனந்த விநாயகா் சந்நிதி முன் சிறப்பு யாகபூஜைகள் நடத்தப்பட்டு, விநாயகருக்கு வெள்ளிக் கவச அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.

இதேபோல, பழனி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, கோயில் முன் நிறுவப்பட்ட திரிசூல வடிவிலான கம்பத்துக்கு ஏராளமான பெண்கள் சண்முகநதியில் இருந்து தீா்த்தம் எடுத்து வந்து அபிஷேகம் செய்து வழிபட்டனா். மேலும் பலா் மஞ்சள், நீா், பால் ஊற்றி வழிபட்டனா்.

கோயில் வளாகம் முழுவதும் ஏராளமானோா் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனா். கோயில் முன் பலரும் நீா்,மோா், கூழ் போன்றவற்றை பிரசாதமாக வழங்கினா்.